அனைவரும் தவறாமல் மறக்காமல் வாக்களிக்க வேண்டும்.. பிரதமர் மோடி கோரிக்கை

Apr 19, 2024,11:29 AM IST

டெல்லி: இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இந்தியா முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி  நடந்து வருகிறது. 18வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு புதுவை மற்றும் தமிழகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.




திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து டிவீட் போட்டுள்ளார். அதில், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது. இன்று தேர்தல் நடைபெறும் 102 இந்த தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.


குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ஆங்கிலம், இந்தி, தமிழ், மராத்தி, பெங்காலி மற்றும் அஸ்ஸாமி ஆகிய ஆறு மொழிகளில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்