ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மைக் சின்னம்!

Jan 20, 2025,07:08 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மைக் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல். ஏ.வாக இருந்தவர்  ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத்தொடர்ந்து அங்கு தற்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 




திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என முக்கியக் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. மற்ற அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்து விட்டன. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி  வேட்பாளராக சீதாலட்சுமி மட்டுமே முக்கியக் கட்சிகளாக களம் காண்கின்றனர்.  மொத்தம் 65 வேட்பாளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு வாபஸ் பெறும் காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிந்தது.  இன்று 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதனையடுத்து திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 47 பேர் இந்த இடைத்தேர்தலை களம் காண உள்ளனர்.


இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மைக் சின்னம் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். கட்சித் தரப்பில் கரும்பு விவசாயி சின்னம் கோரப்பட்ட நிலையில், அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் மறுத்துவிட்டார்.  இதனால் 2வது முறையாக மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்திக்கவுள்ளது.  கடந்த லோக்சபா தேர்தலின்போதுதான் முதல் முறையாக நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட்டது என்பது நினைவிருக்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்