- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
உன் உயிர் கொடுத்து..!!
என் உயிர் தந்தவளே..!!
உன் உதிரத்தை..!!
உணவாக்கி தந்தவளே..!!
உலகின் மிக சுகமான வீடு ..!!
உன் கருவறை மட்டுமே..!!!
உலகின் மிகப் பெரிய சக்தி..!!
உன் அன்பு மட்டுமே..!!!
உலகின் எந்த பரிசும்..!!
உன் ஆசை முத்தத்திற்கு ஈடாகுமோ..?
நான் மறக்கவே முடியாத ,
நான் பார்த்த முதல் ஓவியம் நீ..!!!
நான் கேட்ட முதல் இசை உன் குரல்..!!
என் நலம் விரும்பும் ,
என் ஒரே ஜீவன் நீயே..!!
எனைக் காத்த கடவுளும் நீயே..!!
நீ உடுத்திய பருத்தி சேலையில்...!!
நீ எனக்கு கட்டிய தொட்டிலுக்கு..!!
நிகரான மாளிகை உண்டோ...?
உன் பருத்தி சேலை விரிப்பு மட்டுமே..!!
என் சுகமான பஞ்சு மெத்தை..!!
என் எல்லா கவலைகளும் ,
என்றும் பறந்து போகும்..!!
உன் சேலையை முகர்ந்து ,
உணர்ந்த அந்த நொடியில்..!!
நீ இவ்வுலகில் இல்லாத போது ,
என் ஒரே ஆறுதல்...!!!
நீ விட்டுச் சென்ற "அந்த"
உன் சேலை மட்டுமே...!!!
உன் வாசம்..!! உன் உயிர்..!!
உன் அந்த சேலைக்குள்ளே...!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
{{comments.comment}}