துபாய்: துபாயிலிருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்ற எமிரேட்ஸ் விமானம், 13 மணி நேர பயணத்திற்குப் பின்னர் மீண்டும் துபாய்க்கே வந்து தரையிறங்கியது.
இதுவரை உலக அளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிக மிக அரிதானது. அந்த வரலாற்றைப் படைத்து விட்டது இந்த எமிரேட்ஸ் விமானம். வெள்ளிக்கிழமை காலையில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் ஆக்லாந்து புறப்பட்டது. ஆனால் வழியிலேயே ஆக்லாந்தில் பலத்த வெள்ளம் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டிருந்த தகவல் கிடைத்தது.
இதனால் விமானம் ஆக்லாந்து செல்லாமல் பாதி வழியிலேயே திரும்பி மீண்டும் துபாய்க்கே கொண்டு வந்து தரையிறக்கினர். வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிவாக்கில் கிளம்பிய விமானம், கிட்டத்தட்ட 13 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சனிக்கிழமை நள்ளிரவு வாக்கில் மீண்டும் துபாயில் தரையிறங்கியது.
கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆக்லாந்து சர்வதேச விமான நிலையம் சேதமடைந்திருந்தது. இதனால் சில நாட்களுக்கு விமானங்களை அங்கு இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால்தான் விமான நிலையத்தை மூடினர். நேற்று முதல்தான் அங்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ரோட்டில் குப்பையைக் கொட்டப் போறீங்களா.. ஒரு நிமிஷம் இருங்க.. AI கேமரா கண்டுபிடிச்சுரும்.. கவனம்!
தக்காளி ஒரு கிலோ ரூ.65.. பீன்ஸ் ரூ. 200.. பூண்டு ரூ.440.. இதுதாங்க கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்!
சுவையான.. சூப்பரான.. ரொம்ப ரொம்ப சத்தான.. கருப்பு கவுனி அரிசி பொங்கல்.. எப்படிப் பண்ணலாம்?
பெங்களூருவில் 63 அடி உயர ராம ஆஞ்சநேயர் சிலை திறப்பு.. இதுதான் மிக உயரமான சிலை!
தீபாவளியை முன்னிட்டு திடீர் சரிவில் தங்கம்... சவரனுக்கு ரூ.440 குறைவு.. மக்கள் ஹேப்பியோ ஹேப்பி!
சுழற்றியடிக்கும் டானா புயல் எதிரொலி.. கொல்கத்தா, புவனேஸ்வருக்கு ரயில்கள், விமானங்கள் ரத்து
சாதாரண மழைக்கே மிதக்கும் மதுரை.. ஸ்மார்ட் சிட்டி திட்டமெல்லாம் என்னாச்சு.. மக்கள் பெரும் அவதி!
தீபாவளி வரை.. இரவு 1 மணி வரை வணிக வளாகங்கள் இயங்கலாம்.. கோவை போலீஸ் அறிவிப்பு
டானா புயல் வலுப்பெற்றது.. நாளை ஒடிஷாவில் கரையைக் கடக்கும்.. தமிழ்நாட்டுக்கும் கன மழை உண்டு!
{{comments.comment}}