டெல்லி: பாலஸ்தீனத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து காஸாமுனைப் பகுதியை குணடு வீச்சாலும் அதிரடித் தாக்குதலாலும் சூறையாடி வருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்லாமல், அப்பாவி பாலஸ்தீனியர்களும் உயிரிழந்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் பாலஸ்தீனத்தில் வசித்து வரும் இந்தியர்களுக்கு உதவ களம் இறங்கியுள்ளது மத்திய அரசு. அவசர கால ஹெல்ப்லைன் எண்களை மத்திய அரசு அறிவித்துளளது.
அதன்படி பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்கள், தங்களுக்கு உதவி தேவைப்பட்டால், இந்தியப் பிரதிநிதி அலுவலகத்தை நேரடியாக அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குக் கரையின் ரமல்லா நகரில் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதிநிதி அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவ்வால் - 0592-916418 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 970-592916418 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}