டெல்லி: தேர்தல் பாண்டுகள் மூலமாக கட்சிகள் வாங்கிய பணம் குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
2 செட்டுகளாக இந்த விவரத்தை தனது இணையதளத்தில் அப்லோட் செய்துள்ளது தேர்தல் ஆணையம். ஒரு செட்டில் நிறுவனங்கள், தனி நபர்கள் எவ்வளவு பணம் கொடுத்தனர், எப்போது கொடுத்தனர் என்ற விவரம் உள்ளது. 2வது செட்டில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு பணம், எப்போது கொடுக்கப்பட்டது என்ற விவரம் உள்ளது.
ஆனால் எந்தக் கட்சிக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்ற ஒப்பீடு இதில் இல்லை. இதன் காரணமாக எந்தக் கட்சிக்கு யார் அதிக பணம் கொடுத்தது என்பதை கண்டறிய முடியவில்லை.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்த விவரங்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தேர்தல் ஆணையத்திடம் பென் டிரைவில் போட்டு வழங்கியது. அதை இன்று தனது இணையதளத்தில் தேர்தல் ஆணையம் அப்லோட் செய்துள்ளது.
லாட்டரி மார்ட்டின் ரூ. 1368 கோடி
லாட்டரி மார்ட்டின் என்று அழைக்கப்படும் மார்ட்டின் மிகப் பெரிய அளவில் தேர்தல் பாண்டுகள் மூலம் நன்கொடை வழங்கியுள்ளார். அதாவது ரூ. 1368 கோடி நன்கொடை கொடுத்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணையில் அவரது பியூச்சரிங் கேமிங் நிறுவனம் உட்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
இதேபோல மெகா என்ஜீனியரிங் என்ற நிறுவனம் ரூ. 821 கோடி நன்கொடையாக அளித்துள்ளது.
இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று இல்லை.. தமிழ்நாட்டின் திமுக, அதிமுக முதல் தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டிரிய ஜனதாதளம் என பெரும்பாலான கட்சிகள் தேர்தல் பாண்டுகள் மூலம் பெருமளவில் பணம் பெற்றுள்ளன. இருப்பினும் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கே பெருமளவில் நன்கொடைகள் வந்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}