சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றோடு 3 மாதங்கள் நிறைவடையும் நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி அதிர வைத்துள்ளனர்.
விடாத கருப்பு என்பது போல செந்தில் பாலாஜியை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை. அவர் மீதான சட்ட விரோத பண மோசடி வழக்கில் 3 மாதங்களுக்கு முன்பு அதிரடி ரெய்டுகள் நடத்திய அமலாக்கத்துறை பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. பல மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரை அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அதை விடஅதிரடியாக நெஞ்சு வலி வந்து துடித்தார். உடனடியாக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இதயக் குழாய்களில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரை காவேரி மருத்துவமனையில் அனுமதித்து ஆபரேஷனும் செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றோடு 3 மாதங்களாகிறது. இன்றும் கூட அமலாக்கத்துறை விடவில்லை. காலையிலிருந்து செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது அமலாக்கத்துறை. திண்டுக்கல், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்றைய ரெய்டுக்குள்ளாகியிருப்பவர்களில் முக்கியமானவர்கள் ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோர்தான். மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக இந்த ரெய்டுகள் நடப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!
{{comments.comment}}