ஊட்டியில்.. மே 7 முதல்.. இ-பாஸ் நடைமுறை அமல்.. மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு!

May 03, 2024,06:09 PM IST

ஊட்டி:  கடந்த சில நாட்களாகவே கோடைகால சீசனை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுவதால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியாளர் அருணா அறிவித்துள்ளார்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது, ஊட்டி, கொடைக்கானலுக்கு தினசரி 20 ஆயிரம் வாகனங்கள் வருவதாக அரசுத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வளவு வாகனங்கள் மலைப்பகுதிகளுக்கு சென்றால் சுற்றுச்சூழல் கேடு ஏற்படும், அங்கு உள்ளூர் மக்கள் நடமாட முடியாத நிலையில் சூழல் மோசமாகும், விலங்குகள் பாதிக்கப்படும் என நீதிமன்றம் கூறி, இதற்கான தற்காலிக நடவடிக்கையாக இ பாஸ் திட்டத்தை அறிவித்தது.




கொரோனா காலத்தில் செயல்பாட்டில் இருந்த இ-பாஸ் நடைமுறையை தற்போது செயல்படுத்தினால் வாகனங்கள் வரத்து குறையும். இதனால் சுற்றுச்சூழல் சீர்கேட்டை சற்று குறைக்க முடியும் என்றும் கோர்ட் கருத்து தெரிவித்திருந்தது. மே 7ம் தேதி முதல் இ பாஸ் முறையை அமல்படுத்துமாறும் இரு மாவட்ட கலெக்டர்களுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டது. 


இந்த நிலையில் ஊட்டிக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பான நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,  குளுமையான வானிலை நிலவுவதால் ஊட்டியில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மலர் கண்காட்சிக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மலர்க்கண்காட்சி மே பத்தாம் தேதி முதல் 10 நாட்கள் வரை நடைபெற உள்ளது. 


இந்த ஆண்டு நடக்கவிருப்பது ஊட்டியின் 126 வது மலர் கண்காட்சியாகும். இந்த ஆண்டு மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக லேசர் விளக்கு கண்காட்சிகளும் நடத்தப்பட உள்ளதாக நீலகிரி கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்