பிரித்து எடுத்த பேய் மழை.. திக்கித் திணறிய யுஏஇ... விமானங்கள் ரத்து, பள்ளி கல்லூரிகள் மூடல்

May 03, 2024,06:08 PM IST

துபாய்:  மீண்டும் ஒரு பேய் மழையை துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் சந்தித்துள்ளன. இதன் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.


நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணி புரிய உத்தரவிட்டுள்ளன. பூங்காக்கள், கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




சில வாரங்களுக்கு முன்புதான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பேய் மழை பெய்து  மக்களை ஸ்தம்பிக்க வைத்தது. பலர் அதில் உயிரிழந்தனர். நகரங்கள் பலவற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடிய காட்சிகளை மறந்திருக்க முடியாது. இந்த நிலையில் நேற்று மீண்டும் பேய் மழை திரும்ப வந்தது. நேற்றும் இன்றும் புரட்டிப் போட்ட பெரு மழையால் பல ஊர்கள் வெள்ளக்காடாகியுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.


துபாயில் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.  கடற்கரைகள், பூங்காக்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்தியாவைச் சேர்ந்த இன்டிகோ நிறுவனம் துபாய், ஷார்ஜா, ரஸ் அல் கைமா, அபுதாபிக்கு இயக்கி வரும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  வருகை, புறப்பாடு ஆகியவற்றில் தாமதம் மற்றும் சிக்கல் நிலவுவதாக அது தெரிவித்துள்ளது.


கடந்த மாதம்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பேய் மழை பெய்தது. 1949ம் ஆண்டுக்குப் பிறகு பெய்த மிகப் பெரிய மழையாக இது பதிவானது. இதனால் பல ஊர்கள் வெள்ளத்தில் சிக்கி மிதந்தன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றதைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. துபாய் விமான நிலையமே வெள்ளத்தில் சிக்கி மூழ்கியதையும் மக்கள் பார்த்து அதிர்ச்சியுற்றனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்