தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா ஏற்பு.. சி.பி.ராதாகிருஷ்ணன் வசம் தெலங்கானா, புதுச்சேரி ஒப்படைப்பு!

Mar 19, 2024,11:56 AM IST

டெல்லி: டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுள்ளார். மேலும் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில்,நேற்று பேட்டி கொடுத்த தமிழிசையும், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். தமிழ்நாட்டு அரசியலுக்குத் திரும்புகிறேன். தேர்தலில் போட்டியிடுவேன். தமிழ்நாட்டிலிருந்துதான் போட்டியிடுவேன். புதுச்சேரியில் போட்டியிடவில்லை.எந்தத் தொகுதி என்பதை கட்சி மேலிடம் தான் அறிவிக்கும். ஓரிரு நாளில் தொகுதி எது என்பதை பாஜக மேலிடமே அறிவிக்கும். நான் சொல்ல முடியாது என்று கூறினார்.




இந்நிலையில், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்து  தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பிய கடிதங்களை, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார். தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னரின் பொறுப்புகளை சி.பி.ராதாகிருஷ்ணன் கவனிப்பார் என்றும் குடியரசு தலைவர் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக ராஷ்டிரபதி பவன் வெளிட்ட செய்தி குறிப்பில், தமிழிசையின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, ஜார்க்கண்ட் ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதலாக பொறுப்புகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் தென்சென்னை அல்லது திருநெல்வேலி தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்