சென்னை: கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள மூளையை உண்ணும் அமீபா குறித்து பயப்பத் தேவையில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில், மூளையை உண்ணும் அமீபாவால், ஏரி மற்றும் குளங்களில் குளித்த 3 சிறுவர்கள் பலியாகியுள்ளனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த 14 வயதான மிருதுள், கண்ணூரைச் சேர்ந்த 13 வயதான தக்ஷினா, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகியோர் இந்த அமீபாவால் உயிரிழந்து உள்ளனர். இந்த மூவரும் ஆறு, குளங்களில் குளிக்கும் போது அவர்களது மூக்கின் வழியாக சென்ற அமீபாவால் தான் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை திசுக்களை அழித்து மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அமீபா தொற்று ஏற்பட்டவர்களில் 97 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இறந்து போவதாக அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த அமீபா பாதிப்பால் கேரளாவில் 4வதாக ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளான்.
இந்த அமீபா குறித்து தமிழ்நாட்டிலும் பலர் கவலை அடைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், மூளை உண்ணும் அமீபா குறித்து தேவையற்ற பதற்றம் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் கவனக்குறைவாகவும் இருக்கக் கூடாது. இந்த பர்டிக்குலர் டிசிஸ் வருதுனு சொல்றோம். அதற்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைக் காலங்களில் காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும்.
குடிநீர் தொட்டிகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். தண்ணீர் சேகரிக்கும் சம்ப்பில், மழை தண்ணீர் புகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து நாமளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும். கைகளை ரெலகுலராக கழுவ வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}