மதுரையில் அதிமுக மாநாடு.. தமிழ்நாடு முழுவதும் திமுகவின் நீட் போராட்டம்.. பரபரப்பு!

Aug 19, 2023,03:06 PM IST
சென்னை: மதுரையில் அதிமுக பிரமாண்ட மாநாட்டை நாளை நடத்தவுள்ள நிலையில் திமுக தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு என்ற பெயரில் மதுரையில் பிரமாண்ட மாநாட்டை அதிமுக நாளை நடத்தவுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் அரசியல் மாநாடு என்பதால் அதிமுக தரப்பு பெரும் உற்சாகத்துடன் உள்ளது.



இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடந்து முடிந்துள்ளன. நாளை மாநாட்டுக்காக தற்போதே அதிமுகவினர் மதுரையில் குவியத் தொடங்கி விட்டனர். ஏற்பாடுகள் தடபுடலாக உள்ளன. மதுரை மாநாட்டில் 15 லட்சம் பேர் கலந்து கொள்���ார்கள்,இது பெரும் திருப்புமுனையாக அமையும், அடுத்த லோக்சபா தேர்தலில் இதன் தாக்கம் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நாளை திமுக பெரும் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில்  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆளுநர் ஆர். என். ரவியின் போக்கைக் கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது திமுக. இந்த போராட்டத்தை திமுகவின் மாணவர் அணி, இளைஞர் அணி மற்றும் மருத்துவர் அணி ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன.

இந்த போராட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மாநாடு நடைபெறும் சமயத்தில் அதே நாளில் திமுகவின் போராட்டமும் நடைபெறுவதால் தமிழ்நாடு முழுவதும் இப்போதே பரபரப்பாகியுள்ளது.

ஆனால் அதிமுக மாநாட்டை இருட்டடிப்பு செய்யவே திமுக வேண்டும் என்றே போராட்டத்தை அறிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,  மக்களை திசை திருப்பவும், அதிமுக மாநாட்டை இருட்டடிப்பு செய்யவுமே இந்தப் போராட்டத்தை திமுக அறிவித்துள்ளது.  அவர்கள்தான் நீட்டைக் கொண்டு வந்ததே.  இப்போது தங்களது தவறுகளை மறைக்க நாடமாடுகிறார்கள். நீட் குறித்துப் பேச திமுகவுக்குத் தகுதியே கிடையாது என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்