ஜோதிமணி என் தோழி.. கை சின்னத்தை மறந்துடாதீங்க.. கரூரில் கலக்கிய கனிமொழி பிரச்சாரம்!

Mar 28, 2024,07:17 PM IST

கரூர்: கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம்பி ஜோதிமணியை ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.


2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இன்று இந்தியா கூட்டணியில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்  ஜோதிமணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். 




அப்போது பேசிய கனிமொழி, கரூர் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் என்னுடைய தோழி ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்கு அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  ஒன்றிய மோடி ஆட்சி இன்றைக்கு இந்த நாட்டை சிதைத்து கொண்டு இருக்கிறது. தொடர்ந்து மத ரீதியாக, ஜாதி ரீதியாக மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தி அரசியல் செய்கிறார்கள்.


அந்தச் சண்டையில் வரக்கூடிய ஆபத்தான அரசியலை வைத்து ஓட்டு வாங்கி ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.இந்த தேர்தல் என்பது வெறும் அரசியல் வெற்றிக்கான தேர்தல் இல்லை. இந்த நாட்டை மீட்டெடுக்கக்கூடிய தேர்தல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது 100 நாட்கள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், 100 நாள் திட்டம் மக்களுக்கு முப்பது நாட்கள் கூட வேலை கிடைக்கவில்லை. பணத்தில் மிதந்து கொண்டு இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளனர். ஆனால் நூறு நாட்கள் வேலை திட்டத்தின் மூலம் மக்களுக்கு வேலை வழங்க நிதி இல்லையாம். அடிப்படை விலை வேண்டி விவசாய போராட்டம் நடத்திய போது அவர்களை ட்ரோன், ஆயுதம் கொண்டு தாக்கினர். 


பாலியல் குற்றங்களுக்கு உள்ளான 44 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். ஒருவருக்கு ஜாமின் என்பது அடிப்படையான ஒன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இத்தனை மாதம் ஆகியும் ஜாமீன் வழங்கவில்லை . இந்தியாவில் இரண்டு முதலமைச்சர்கள் அமலாக்கத் துறையினால் மத்திய அரசு கைது செய்துள்ளது. 90% அமலாக்கத்துறை எதிர்க்கட்சியினர் மீதுதான் வழக்கு போட்டுள்ளனர்.


மணிப்பூரில் இன்னும் பிரச்சனை சீராக்கப்பட வில்லை. மக்கள் இன்னும் நிவாரணம் முகாம்களில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முகாம்களில் குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறார்கள். பெரியவர்களுக்கு மருந்து மாத்திரை கிடைக்கவில்லை.  சாப்பாடு கிடையாது என்ற பயத்தோடு அங்கே மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருந்தனர். இரு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். அங்கே அவமானப்படுத்தப்பட்டு பாலியல் கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்ட நிலையை நாம் பார்த்தோம். இதுவரை அங்கு சென்று மக்களை பிரதமர் சந்திக்கவில்லை. ஆனால் எதிர்கட்சிகள் நாங்கள் அங்கே இருக்கக்கூடிய மக்களை சந்தித்து இருக்கிறோம்.




புயல் வெள்ளத்தினால் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போது வந்த பார்க்காத பிரதமர் , மக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் வந்து எட்டிப் பார்க்காத பிரதமர் தேர்தல் என்று வந்தால் பத்து நாட்கள் இங்கு தான் இருந்தார். 

100 பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்புகள், 355 கோடியில் நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்கள், 587 கோடியில் மாவட்ட வளர்ச்சிக்கு புதிய திட்டம், மற்றும் ஜவுளி உற்பத்தி பொருட்கள் மேம்பாட்டு ஆலை உள்ளிட்ட பல திட்டங்களை ஜோதிமணி கொண்டு வந்துள்ளார். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும் என்று நம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்