சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
விஜயகாந்த உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாகவே வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில், திடீர் இருமல், காய்ச்சல், சளி ஏற்பட்டு உடல் நலக்குறைவால் கடந்த 18ம் தேதி மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த மருத்துவமனையில் இருக்கும் போது பல்வேறு விதமாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால் அதை தேமுதிக கட்சி பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து மறுத்து வந்தார். மேலும், விஜயகாந்த்துடன் இருக்கும் புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் வெளியிட்டு, அவரது உடல் நிலை தற்பொழுது சீராக தான் உள்ளது என்று கூறி வதந்திகளுக்கு எல்லாம் முற்றுபுள்ளி வைத்தார் பிரேமலதா.
இந்நிலையில், தற்போது உடல் நிலை சீராகி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார் விஜயகாந்த். இதுதொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ நிலை அறிக்கையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அறிந்த அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}