சென்னை: திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட ஒன்பது மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 37 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியாளராக ஆர். சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட கலெக்டராக ஐஏஎஸ் அதிகாரி சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் கலெக்டராக சரவணன் நியமனம்.
கிருஷ்ணகிரி கலெக்டராக தினேஷ் குமார் நியமனம். விழுப்புரம் மாவட்டம் கலெக்டராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கலெக்டராக தர்ப்பகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் கலெக்டராக மோகன சந்திரன் நியமனம். திண்டுக்கல் கலெக்டராக பூங்கொடி வணிகவரித்துறையின் இணை ஆணையராக நியமனம்.
தர்மபுரி கலெக்டர் சாந்தி, பட்டுப்பூச்சி வளர்ப்பு துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்பக் கல்வி ஆணையராக இன்னசண்ட் திவ்யா நியமனம். கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக கண்ணன் நியமனம். நகராட்சி நிர்வாக இணை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி லலித் ஆதித்யா நீலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
{{comments.comment}}