சென்னை: நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளருமான, நடிகர் பிரேம்ஜியின் திருமணம் வரும் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற இருப்பதால் எங்களுடைய பிரைவசியை மதித்து, இருந்த இடத்திலிருந்து மணமக்களை வாழ்த்தி அதை வைரலாக்குமாறு அவரது அண்ணனும், இயக்குனருமான வெங்கட் பிரபு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பிதான் நடிகர் பிரேம்ஜி. இசையில் ஆர்வமுள்ள, பிரேம்ஜி தனது திரை வாழ்க்கையை நடிகராக ஆரம்பித்து அப்படியே பின்னனிப் பாடகராக, இசையமைப்பாளராக என்று போய்க் கொண்டிருக்கிறார்.
பெரும்பாலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த ராப் பாடல்களில் பாடியுள்ளார். 2006 ஆம் ஆண்டு சிலம்பரசன் நடித்த வல்லவன் திரைப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர். அண்ணன் வெங்கட் பிரபுவின் சென்னை 600028 என்ற படம் மூலம் அறிமுகமானார். இப்படம் கோடை விடுமுறையில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதிலும் பிரேம்ஜியின் நகைச்சுவை நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இவர் பேசிய என்ன கொடுமை சார் இது என்ற டயலாக் மிகவும் பிரபலமானது.
இந்த வசனம் தற்போது வரை டிரெண்டிங்கில் உள்ளது. இதன் பின்னர் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வர நிறைய வாய்ப்பு வரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மங்காத்தா, சேட்டை, கோவா, சென்னை 600028 -2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். பிசியான நடிகராக இருந்தும், பிரபலமானவராக இருந்தும் கூட இன்னும் ஏன் கல்யாணம் ஆகவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வந்தது.
இந்த நிலையில்தான் சமீபத்தில் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வலம் வந்தது. இது உண்மையா, பொய்யா என்ற குழப்பமும் கூடவே உலா வந்தது. இதை தற்போது வெங்கட் பிரபு உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும் அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!
எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. பாகுபலி கட்டப்பா ஏன் கொன்றார்? சொப்பன சுந்தரியை இப்ப யார் வச்சிருக்கா..? இதை எல்லாவற்றையும் விட பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ..? என்று உங்கள் கேள்விக்கு பதில் வரும் ஒன்பதாம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவினர்களுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம் .
இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமண பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்து விட்டார். எப்படி கல்யாண பத்திரிக்கை வைரலானதோ அதேபோல் மணமகள் மீடியாவை சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலாவுகின்றன. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களை பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம் என வெளியிட்டுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}