சென்னை: கேப்டன் விஜயகாந்த் எனக்கு ஒரு அப்பா போல. ஒரு இயக்குநராக இங்கு நான் வரவில்லை என்று விஜயகாந்த் படத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உருக்கமாக கூறினார்.
சமீபத்தில் பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைக் கண்டது திரையுலகம். கேப்டன் விஜயகாந்த் மரணமடைந்தார்.. நடிகர் போண்டா மணி மரணமடைந்தார். நிறைய இழப்புகளை சந்தித்து விட்டது திரையுலகம்.
இந்த நிலையில், தமிழ்நாடு மேடைநடன கலைஞர்கள் தலைமை சங்க நிர்வாகிகள் தலைவர் பிரேம் நாத், செயலாளர் எல்.கே.அந்தோனி, பொருளாளர் எம்.ஜி.ஆர்.இக்பால் ஆகியோர் சங்கம் சார்பில், கேப்டன் விஜயகாந்த், சினிமா பிஆர்ஓ கடையம் ராஜூ, காமெடி நடிகர் போண்டா மணி ஆகியோருக்கு படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம் நடத்தினார்கள்.
இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, அரவிந்தராஜ், செந்தில்நாதன், பாரதி கணேஷ், நடிகர்கள் முத்துக்காளை, பெஞ்சமின், சாரபாம்பு சுப்புராஜ், வெங்கல் ராவ், ஜூலி பாஸ்கர், ஜெய சூர்யா, ராஜ் காந்த், சிவகுமார், லொள்ளு சபா ஜீவா, சிவன் சீனிவாசன் ஆகியோர் கலந்துக் கொண்டு, அஞ்சலி செலுத்தினார்கள்!
இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், 'ஒரு நடிகருக்கு ஒரு இயக்குனர் படம் திறந்து வைப்பதாக வரவில்லை. ஒரு அப்பாவுக்கு ஒரு மகன் படம் திறந்து வைப்பதாக உணர்கிறேன்' என்றார். இயக்குநர் செந்தில்நாதன் பேசமுடியாமல் கண் கலங்கினார். அவர் பேசுகையில், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தவர் கேப்டன் என்றார்.
காமெடி நடிகர் போண்டா மணி குடும்பத்தினருக்கு, இயக்குனர் ஆர் கே செல்வமணி கையால், தமிழ்நாடு மேடைநடன கலைஞர்கள் தலைமை சங்க தலைவர் பிரேம் நாத் உதவித் தொகை வழங்கினார். நிகழ்ச்சியை பிரியங்கா ரோபோ சங்கர் ஒருங்கிணைத்தார். மக்கள் தொடர்பை கோவிந்தராஜ் கவனித்தார்.
Thala is Back: மீண்டும் கேப்டனானார் தல தோனி.. ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!
விடைபெறுகிறார் அண்ணாமலை.. வந்தாச்சு தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்தல்.. நாளை விருப்ப மனு!
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
{{comments.comment}}