திண்டுக்கல்: அண்ணாமலைதான் வருங்கால முதல்வர் என்று பாஜகவினர் சொல்லி வந்தனர். அதை ஏற்க நாம் என்ன இளிச்சவாயர்களா.. இதனால்தான் ஜே.பி. நட்டா, அமித் ஷா ஆகியோரிடம் புகார் கூறி விட்டு கூட்டணியை விட்டு தைரியமாக வெளியே வந்தார் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
திண்டுக்கல் மாவட்டம் தங்கச்சியம்மாபட்டியில் எம்ஜிஆரின் 107வது பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, அதிமுக - பாஜக கூட்டணி முறிய என்ன காரணம் என்பது குறித்து ஒரு புதிய தகவலை வெளியிட்டார். இது அதிமுக, பாஜக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சிலிருந்து:
முதல்வர் பதவியை வகிக்க எடப்பாடியாருக்கு முழுத் தகுதி உண்டு என்று நாம் சொல்லி வந்தோம். பாஜகவைப் பொறுத்தவரை அடுத்த பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த முதல்வர் தகுதி அண்ணாமலைக்கு உண்டு என்று சொல்லி வந்தார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா.
பழனிக்கு வேண்டுமானால் காவடி தூக்கலாம். அண்ணாமலைக்கு எப்படி தூக்க முடியும்?. எடப்பாடியார்தான் முதல்வர் என்று நாம் சொல்லி வந்தபோது, அவருடன் கூட இருந்தவர்கள், வாழ்க அண்ணாமலை, வருங்கால முதல்வர் அண்ணாமலை என்று கோஷம் போட்டால் நாம் என்ன இளிச்சவாயர்களா?
இதையடுத்தே ஜே.பி. நட்டா, அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து புகார் கூறினோம். அதன் பிறகு தைரியமாக, ஆனந்தமாக, வீரத்தின் விளை நிலமாக பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற முடிவை எடப்பாடியார் எடுத்தார் என்று கூறியுள்ளார் திண்டுக்கல் சீனிவாசன்.
அதிமுக - பாஜக கூட்டணி லோக்சபா தேர்தலில் தொடருமா என்ற சின்ன நப்பாசை சிலரிடம் இருந்து வருகிறது. ஆனால் அதிமுக தலைவர்களும், பாஜக தரப்பில் ராம சீனிவாசன் போன்றவர்களும் பேசி வருவதும், பேட்டி தருவதையும் பார்த்தால் அதற்கான வாய்ப்பு குறைந்து கொண்டே போவது போலத்தான் தெரிகிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க அண்ணாமலை தரப்பு மறுத்ததால்தான் கூட்டணியை முறித்ததாக திண்டுக்கல் சீனிவாசன் தேங்காய் உடைப்பது போல கூறியிருப்பது புதிய சலசலப்பை ஏற்படுத்துள்ளது.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}