கார் விபத்தில் சிக்கினாரா யோகிபாபு?.. நான் நல்லாருக்கேன்.. இது பொய் செய்தி.. டிவீட்டால் குழப்பம்!

Feb 16, 2025,10:45 AM IST

ராணிப்பேட்டை: நடிகர் யோகிபாபு பயணித்த கார் இன்று அதிகாலையில் விபத்தில் சிக்கியதாகவும், அதில் அவர் அதிர்ஷ்டவசமாக  காயமின்றி தப்பியதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தான் நலமுடன் இருப்பதாகவும், இது பொய்ச் செய்தி என்றும் நடிகர் யோகிபாபு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருந்து வரும் காமெடி நடிகர் யோகிபாபு மட்டுமே. மற்ற காமெடியன்கள் அனைவருமே ஹீரோக்களாகி விட்டதால் யோகிபாபு மட்டுமே காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். அத்தோடு, கதை நாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.


பிசியான நடிகராக வலம் வரும் யோகிபாபு இன்று காலை  தனது காரில் பெங்களூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியதாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.




அதாவது, வாலாஜாபேட்டை டோல்கேட் அருகே  அதிகாலை 3 மணியளவில் யோகிபாபுவின் கார் வந்து கொண்டிருந்தது.  அந்த சமயத்தில் திடீரென கார்  கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக, டிரைவர், நடிகர் யோகிபாபு ஆகியோர் காயமின்றி தப்பினர்.


உடனடியாக வேறு கார் வரவழைக்கப்பட்டு அந்தக் காரில் ஏறி யோகிபாபு புறப்பட்டுச் சென்றார் என்று அந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது. 


ஆனால் யோகிபாபு தனது எக்ஸ் தளத்தில் காலை 10.02 மணிக்கு ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில், I am fine all, This is false news என்று கூறியுள்ளார் யோகிபாபு. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு.. முதல் முறை எம்.எல்.ஏ.. டெல்லியின் 4வது பெண் முதல்வராகிறார்!

news

சாம்பியன்ஸ் டிராபி போட்டின்னு வந்துட்டா.. விராட் கோலிக்கு லட்டு மாதிரி.. என்னா ஆட்டம் பாருங்க!

news

பிப்.25ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்.. தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

news

பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் மது, போதைப் பொருட்கள்தான்.. ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

news

பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன.. நடவடிக்கை எடுங்க.. டாக்டர் அன்புமணி கோரிக்கை

news

காலைல 3 மணி இருக்கும்.. சேவல் கொக்கரக்கோன்னு கூவிருது.. கோர்ட்டுக்குப் போன அடூர் ராதாகிருஷ்ணன்!

news

வடிவேலு போட்டோவை ஷேர் செய்த பார்த்திபன்.. மீண்டும் கூட்டணியா.. பழைய பூங்காற்று திரும்புமா?

news

வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மனிதர்களை மட்டுமல்லாமல்.. ஆடு மாடுகளையும் கடிக்கும் வெறிநாய்கள்.. சீமான் முக்கிய கோரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்