சென்னை: காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
20 வயதான வலது கை பேட்ஸ்மேனான ப்ரீவிஸ், அதிரடியாக விளையாடக்கூடிய திறமை பெற்றவர். அவர் இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். சிஎஸ்கே அணி அவரை ரூபாய் 2.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. பேபி ஏபி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ப்ரீவிஸ்.
குர்ஜாப்னீத் சிங் இந்த சீசனில் இதுவரை சிஎஸ்கே அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முழு சீசனிலிருந்தும் விலகியுள்ளார்.
டெவால்ட் ப்ரீவிஸ் சிஎஸ்கே அணியில் இணைவது அந்த அணியின் பேட்டிங் வரிசைக்கு மேலும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இடம் பெறவில்லை. தோனி தலைமையில் சிஎஸ்கே ஆடி வருகிறது.
தொடர் தோல்விகளைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக சூப்பராக ஆடி வெற்றி பெற்றது. இளம் வீரர் ஷேக் ரஷீத் சிறப்பாக ஆடியிருந்தார். இந்த நிலையில் பேபி ஏபியும் அணியில் இடம் பெறுகிறார். அவருக்கு ஆடும் வாய்ப்புகிடைத்து அவரும் அதிரடி காட்டினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் போட்டிகளில் கலக்கும் என்று தெரிகிறது.
76 ல் ஷாவால்தான் திராவிட மாடல் ஆட்சி கலைக்கப்பட்டது: டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்!
Out of control இல்லை.. Out of cantact.. முதல்வர் பேச்சுக்கு அண்ணாமலை அதிரடி பதில்!
உ.பிக்கு என்னாச்சு?.. ஒரே எஸ்கேப்பா இருக்கே.. மகளின் மாமனாருடன் தலைமறைவான பெண்!
சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!
{{comments.comment}}