மதுரை: ஜனவரி 24ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் புதிய அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முன்பதிவு செய்துள்ள காளைகள் மற்றும் காளையர்கள் விவரங்கள் வெளியாகி உள்ளது.
இதில் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க 9,312 காளைகளும், 3,669 காளையர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.
மதுரை அலங்காநல்லூரில், உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அலங்காநல்லூர் மேங்கிப்பட்டி கீழக்கரையில் 44 கோடி ரூபாய் செலவில்,மிகப் பிரம்மாண்டமான அதிநவீன வசதியுடன் கூடிய ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டது.
இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் புதிய அரங்கத்தை வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுஉள்ளார். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி, மாடு பிடி வீரர்கள் செல்லும் இடம், அவசரக்கால வழி, உரிய பாதுகாப்பு தடுப்புகளும் அரங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய அரங்கத்தில் திறப்பு விழா கொண்டாட்டமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய அரங்கத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு பெற காளைகள் மற்றும் காளையர்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த போட்டியில் பங்கு பெற பல்வேறு நிபந்தனைகளும் வரையறுக்க பட்டிருந்தது .இதனை ஏற்ற மாடுபிடி வீரர்களும் மற்றும் காளை உரிமையாளர்கள் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.இந்த முன்பதிவுக்கான விவரம் தற்போது வெளியாகி உள்ளன.
இதன்படி கீழக்கரை ஜல்லிக்கட்டு பங்கேற்க 9,312 காளைகளும் 3,669 காளையர்களும் பதிவு செய்துள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}