"நாங்க இருக்கோம்டா செல்லம்".. கைவிடப்பட்ட பெண் குழந்தையை தத்தெடுக்க போட்டா போட்டி!

May 06, 2023,03:10 PM IST
வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில் அநாதரவாக விடப்பட்ட பெண் குழந்தையை தத்தெடுக்க 10 தம்பதிகள் முன்வந்துள்ளதாக அரசு கால்நடை மருத்துவரும், சமூக சேவகருமான டாக்டர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

பிறந்த பச்சிளம் குழந்தையான இந்த பெண் குழந்தை, காட்பாடி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அதை மீட்டு உடனடியாக குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். குழந்தைக்கு முழுமையான பரிசோதனை செய்யப்பட்டது. குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது.

முன்னதாக இக்குழந்தையை காட்பாடி ரயில் நிலையத்துக்குக் கொண்டு வந்த பெண், சிசுவை, அங்கிருந்த வயதான தம்பதியிடம் கொடுத்து டாய்லெட் போய் விட்டு வருகிறேன். பார்த்துக்கங்க என்று கூறிச் சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. இதையடுத்து அந்தத் தம்பதி ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.



இந்தத் தகவல் கிடைத்ததும் டாக்டர் ரவிசங்கர் குழந்தை குறித்த தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டார்.இதைப் பார்த்து அவருக்கு ஏகப்பட்ட பேர் போன் செய்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் ரவிசங்கர் கூறுகையில், 10 தம்பதிகள் போன் செய்துள்ளனர். வேலூரைச் சேர்ந்தவர்கல் அனைவருமே. குழந்தையைத் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.

இதற்கிடையே குழந்தையின் எதிர்காலம் குறித்துத் தீர்மானிக்க கலெக்டர் குமரவேல் பாண்டியன் குழு ஒன்றை அமைக்கவுள்ளார். அதன் பின்னரே குழந்தை யாருக்கு தத்து கொடுக்கப்படும் என்பது குறித்துத் தெரியவரும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்