தீபாவளி வரை.. இரவு 1 மணி வரை வணிக வளாகங்கள் இயங்கலாம்.. கோவை போலீஸ் அறிவிப்பு

Oct 24, 2024,11:33 AM IST

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்க இரவு ஒரு மணி வரை வணிக வளாகங்கள் இயங்கலாம் என கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.


இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புது துணி வாங்குவது, பட்டாசு வாங்குவது என பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். தீபாவளி வருவதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் கடைவீதிகளில் கூட்ட நெரிசல் அலை மோதுகிறது. குறிப்பாக ஜவுளிக்கடைகளிலும் நகைக்கடையிலிலும் கட்டுக்கடங்காத கூட்டம் சாரை சாரையாக வந்து கொண்டே இருக்கிறது. 




இதற்கிடையே தானா புயல் எதிரொளியாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஷாப்பிங் மால், ஜவுளி கடை நகைக்கடை போன்ற வணிக வளாகங்கள் முழுவதும் இரவு 10 மணியுடன் முடிவடைகிறது. 


இதனால் தீபாவளி பண்டிகைக்காக புத்துணிகள் வாங்குவதில்  சிரமப்பட்டு வருகிறது. இது தவிர பகலில் தங்களின் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு மாலை நேரங்களில் கடைவீதிக்கு சென்றால் ஜவுளி கடைகள் விரைவில் மூடப்படுகிறது. டிராபிக், கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் நிதானமாக புது துணிகள் வாங்க முடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் கூட்ட நெரிசலை சமாளிக்க கோவை  மாநகர காவல் துறை சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அதன்படி ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், உள்ளிட்ட பல்வேறு வணிக வளாகங்கள் தீபாவளி வரை கூடுதலாக இரவு ஒரு மணி வரை இயங்கலாம். மேலும் பொதுமக்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்குத் தேவையான பொருட்களை சிரமமின்றி வாங்கிக் கொள்ள போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தக்காளி ஒரு கிலோ ரூ.65.. பீன்ஸ் ரூ. 200.. பூண்டு ரூ.440.. இதுதாங்க கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்!

news

சுவையான.. சூப்பரான.. ரொம்ப ரொம்ப சத்தான.. கருப்பு கவுனி அரிசி பொங்கல்.. எப்படிப் பண்ணலாம்?

news

பெங்களூருவில் 63 அடி உயர ராம ஆஞ்சநேயர் சிலை திறப்பு.. இதுதான் மிக உயரமான சிலை!

news

தீபாவளியை முன்னிட்டு திடீர் சரிவில் தங்கம்... சவரனுக்கு ரூ.440 குறைவு.. மக்கள் ஹேப்பியோ ஹேப்பி!

news

சுழற்றியடிக்கும் டானா புயல் எதிரொலி.. கொல்கத்தா, புவனேஸ்வருக்கு ரயில்கள், விமானங்கள் ரத்து

news

சாதாரண மழைக்கே மிதக்கும் மதுரை.. ஸ்மார்ட் சிட்டி திட்டமெல்லாம் என்னாச்சு.. மக்கள் பெரும் அவதி!

news

தீபாவளி வரை.. இரவு 1 மணி வரை வணிக வளாகங்கள் இயங்கலாம்.. கோவை போலீஸ் அறிவிப்பு

news

டானா புயல் வலுப்பெற்றது.. நாளை ஒடிஷாவில் கரையைக் கடக்கும்.. தமிழ்நாட்டுக்கும் கன மழை உண்டு!

news

ஈழத் தாயக போராட்டத்தை இழிவுபடுத்தும் ஒற்றை பனைமரம்.. திரையிடுவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்