ஹய்யா ஜாலி.. சென்னை மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைக்க முடிவு!

Oct 03, 2023,02:01 PM IST

சென்னை: சென்னையில் உள்ள புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைத்து சோதனை அடிப்படையில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.


சென்னை மாநகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று புறநகர் மின்சார ரயில்கள். இதை வைத்து பல புத்தகங்கள் போடலாம்.. அத்தனை அனுபவங்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கும் அமைதியான தோழன்தான் சென்னை மின்சார ரயில்கள்.


இந்த ரயில்களில் பெரிய அளவில் அடிப்படை வசதிகள் கிடையாது. ஏறலாம், உட்காரலாம், இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிப் போய்க்கலாம். அவ்வளவுதான். கழிப்பறை வசதியோ, ஏசி வசதியோ எதுவும் கிடையாது. இப்போது பஸ்களில் கூட ஏசி பஸ்கள் வந்து விட்டன. ஆனால் இந்த ரயில்கள் மட்டும் இன்னும் அப்படியேதான் உள்ளன.


இந்த நிலையில், புறநகர் மின்சார ரயில்களில் கூடுதலாக ஏசி பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை ரயில்வே நிர்வாகம் ஏற்றுள்ள நிலையில் சோதனை முறையில் ஏசி பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 அல்லது 3 பெட்டிகளை இணைத்து முதலில் சோதனை முறையில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  6 மாதங்களில் சோதனை ஒட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த இரண்டு நாட்களாக தாம்பரம் டூ சென்னை கடற்கரை வரையிலான புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்தப் பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் பாராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி இருந்தனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைக்க முடிவு செய்திருப்பது சென்னை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


இனி கொழுத்தும் சென்னை வெயில் காலத்தை குளுகுளுன்னு கழிக்கும் வாய்ப்பை இந்த ரயில்கள் தரும் என்று நம்பலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்