வங்கக் கடலில் புயல் உருவாகப் போகிறது.. ஆனால் நம்மிடம் வராது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

May 19, 2024,09:50 AM IST

சென்னை: வங்கக் கடலில் மே 22ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தொடர்ந்து வலுப் பெற்று புயலாக மாறக் கூடும். ஆனால் அது நம்மிடமிருந்து தொலை தூரத்திற்குப் போய் விடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.


தென் மேற்குப் பருவ மழை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் அதற்கான முஸ்தீபுகளில் இயற்கை இறங்கி விட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் தற்போது மேலடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால் மழை கிடைத்து வருகிறது.


இந்த வளிமண்டல சுழற்சியானது வங்கக் கடலில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மே 22ம் தேதி மாறவுள்ளது. அதைத் தொடர்ந்து இது காற்றழுத்த மண்டலமாக 24ம் தேதி வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தற்போது ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.



அவர் கூறுகையில், காற்றழுத்த மண்டலமானது  மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். ஆனால் அது புயலாக மாறும்போது தமிழ்நாட்டை விட்டு வெகு தொலைவு போயிருக்கும். நம்மிடம் புயல் வராது. அதேசமயம், கன்னியாகுமரி மாவட்டத்தில் கவனம் வைக்க வேண்டும்.  தற்போதைய நிலையில் கன்னியாகுமரி, தென் கேரளாவில் நிறைய மழைக்கு வாய்ப்புள்ளது.


அதேபோல சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்