இன்னும் சில மணி நேரத்தில் கரையைக் கடக்கிறது மிச்ஜாங் புயல் : வானிலை மையம்

Dec 05, 2023,02:43 PM IST
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிச்ஜாங் புயல் அடுத்த சில மணி நேரங்களில் தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவத்துள்ளது.

சென்னைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருந்த அடர்ந்த காற்றழுத்த பகுதி மிச்ஜாம் புயலாக மாறியது. மிச்ஜாம் புயலால், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கன மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மிதமானது முதல் கனமழை பெய்தது. இந்த பேய் மழையால் கடந்த 2 நாட்களாக சென்னை வாசிகள் தவித்து வந்தனர். இந்த புயல் இன்று ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மழையின் தாக்கம் குறைந்தது.

 இந்நிலையில், 12 கிலோமீட்டர் வேகத்தில் காலையிலிருந்து புயல் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா காவாலியில் இருந்து 40 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மிச்ஜாம் புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.  நெல்லூர், பாபட்லாவில் கனத்த மழை பெய்தது. 



ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் பகுதியில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசி வருவதாகவும் மிச்ஜாங்ம் புயல் இன்று பிற்பகல் ஆந்திராவின் பாபட்லாவில் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்