வங்கக் கடலில் அதி தீவிர புயலாக உருவெடுத்தது ஹாமூன் புயல்.. தமிழ்நாட்டுக்கு ஆபத்தில்லை!

Oct 24, 2023,11:19 AM IST

சென்னை: அரபிக் கடலில் தேஜ் புயல் உருவாகி தற்போது ஏமன் நாட்டைக் கடந்துள்ள நிலையில், வங்கக் கடலில் அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ளது ஹாமூன். இந்தப் புயலானது வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை.


புயலைத் தொடர்ந்து சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 


ஹாமூன் புயல் அதி தீவிர புயலாக உருமாறியுள்ளது.  புயலைத் தொடர்ந்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. ஒடிசாவிற்கு கிழக்கு, தென்கிழக்கில் 210 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள புயல் நாளை நண்பகலில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தின் சிட்டகாங் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.




தமிழகத்தை பொறுத்தவரையில் அதிகளவிலான மழைப்பொழிவை ஏற்படுத்தும் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தற்போது தொடங்கி உள்ளது. ஹாமூன் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள கடற்கரை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.


ராமேசுவரம், பாம்பன், மண்டபம்  பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பலத்த சூறவாளி காற்றும் வீசிவருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் வலுப்பெற்று வருவதை முன்னிட்டு 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்