12,000 பேர் டிஸ்மிஸ் சரிதான்.. ஆனால்.. சுந்தர் பிச்சையை எச்சரிக்கை செய்த  முதலீட்டாளர்

Jan 24, 2023,12:25 PM IST
லிபோர்னியா: கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களில் 12,000 பேரை டிஸ்மிஸ் செய்தது சரியான நடவடிக்கைதான். ஆனால் இது போதாது. இன்னும் பல ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று கூகுள் முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹான் கூறியுள்ளார்.



இதுதொடர்பாக கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.  கூகுள் நிறுவனம் ஜனவரி 21ம் தேதி 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது ஐடி உலகை அதிர வைத்துள்ள நிலையில் இது போதாது என்று கூகுள் நிறுவனத்தில் 6 பில்லியன் டாலர் பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹான் கூறியுள்ளது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

இதுதொடர்பாக ஹான் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

6 சதவீத ஊழியர்களை கூகுள் வேலைநீக்கம் செய்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை.  ஆனால் இது வளர்ச்சிக்கு உதவாது. இன்னும் பல ஆயிரம்  பேரை நீக்கியாக வேண்டும்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆல்பாபெட் நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக அதிகரித்து விட்டது.  இதை 1.5 லட்சமாக குறைக்க வேண்டும். இன்னும் 20 சதவீத ஊழியர்களை குறைத்தால்தான் நல்லது. 
இதுதொடர்பாக விரைவில் உங்களுடன் பேச வேண்டும் என்று ஹான் கூறியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக ஆல்பாபெட் நிறுவனம் கூகுள், யூடியூப் மற்றும் தனது பிற தயாரிப்புகளை மேம்படுத்த பல்வேறு திறமையாளர்களை நிறுவனத்தில் இணைத்துக் கொண்டே வந்தது. இதனால் ஊழியர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்