- மஞ்சுளா தேவி
லண்டன்: அமெரிக்காவில் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை ஒலிம்பிக் கவுன்சில் ஏற்றால் 128 வருடத்திற்குப் பிறகு கிரிக்கெட் ஒலிம்பிக்கில் மீண்டும் இடம் பெறும்.
ஒலிம்பிக் என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சர்வதேச விளையாட்டு நிகழ்வாகும். ஒலிம்பிக் போட்டி முதல் முறையாக 1896 ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. ஒலிம்பிக் கொடியை பியரி டெ கூபர்டின் என்பவர் வடிவமைத்தார். இந்த கொடி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தபடி ஐந்து வளையங்களை கொண்டதாக அமைந்திருக்கும்.
இந்த ஐந்து வளையங்கள் ஒவ்வொன்றும் ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ,ஆப்ரிக்கா, அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களை பிரதிபலிக்கின்றன. இந்த வளையத்தில் உள்ள ஐந்து நிறங்களும் ஒவ்வொரு நாட்டின் தேசிய கொடியில் உள்ள நிறத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும்.
போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற போற்றியாளர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பதக்கங்கள் பரிசாக வழங்கப்படும். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது, உலக அளவில் மிகப் பெரிய கெளரவமாக பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆவார்.
சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 1900 ஆம் ஆண்டு நடந்த பாரீஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு நடைபெற்ற போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு இடம் பெறவில்லை. நீண்ட வருடங்களுக்குப் பின்பு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2028 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதில் கிரிக்கெட்டை சேர்க்க முடிவு செய்தள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனெனில் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு பெரும் பங்கு வகிக்கின்றது. கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறந்து விளங்குகின்றனர். தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர், மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது நினைவிருக்கலாம். ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் அதிலும் இந்தியாவுக்கான வாய்ப்பு அதிகம் இருக்கும்.
வருகின்ற 15ஆம் தேதி 141வது சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது .இந்த கூட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2028 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கில் 20 ஓவருக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி இடம் பெறும் என்று தெரிகிறது.
காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!
98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!
{{comments.comment}}