சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் (தனி) தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் முதல் ஆளாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை முடித்து விட்டது. தற்போது தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக ஏற்கனவே சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்திருந்தது. இரண்டு தொகுதிகள் என எண்ணிக்கையில் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிக்கு எந்த தொகுதி என்பதில் இறுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டியிட்ட கோவை தொகுதி இந்த முறை திமுகவுக்கு போய் விட்டது. அதற்கு் பதில், திமுக வென்ற திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட்க்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இறுதியாக இன்று காலை முதலமைச்சர் மு க ஸ்டாலினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நானும் சேர்ந்து ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் ஒன்று மதுரை, இரண்டாவது திண்டுக்கல் என்கிற இரண்டு தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
நிச்சயமாக இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பது மட்டுமல்ல தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்த அணி மகத்தான வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் (தனி) தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த தேர்தலிலும் இதே தொகுதிகளில் தான் கம்யூனிஸ்ட் போட்டியிட்டது என்பது நினைவிருக்கலாம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}