பெண்ணை முட்டித் தூக்கிய எருமை மாடு.. கட்டித் தூக்கி வந்து முகாமில் அடைத்த அதிகாரிகள்

Jun 17, 2024,06:00 PM IST

சென்னை: சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை ஒரு எருமை மாடு முட்டித் தூக்கி கொண்டு சில மீட்டர் தூரம் வரை ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மாட்டை தற்போது மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்து அதை முகாமில் அடைத்துள்ளனர்.


சென்னையில் நாய்த் தொல்லையும், மாடுகளின் தொல்லையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சாலையில் செல்வரை நாய்கள் கடிப்பதும், மாடுகள் முட்டித் தள்ளுவதும் தொடர் கதையாகி வருகிறது. நகருக்குள் மாடுகள் வளர்க்க தடை உள்ளது. ஆனாலும் அதையும் மீறி பலர் மாடுகள் வளர்க்கின்றனர். குறிப்பாக புறநகர்களில் மாடுகளின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது.


வளர்க்கும் மாடுகளை தெருக்களிலேயே விடுகின்றனர். பகல் நேரத்தில் அவை சாலைகளில் சுற்றித் திரிகின்றன. அவை திடீரென வெருண்டு ஓடுவதும், முட்டுவதும், போக்குவரத்து பாதிக்கப்படும் அளவுக்கு சாலைகளில் படுத்துக் கிடப்பதும் புறநகர்களில் சர்வ சாதாரணாக பார்க்கலாம்.




இந்த நிலையில்தான் திருவொற்றியூர், சோமசுந்தரம் 2வது தெருவில் ஒரு மாடு, திடீரென சாலையில் சென்ற பெண்ணை முட்டித் தூக்கி விட்டது. கொம்புகளில் சிக்கிக் கொண்ட பெண்ணை சில மீட்டர் தூரம் வரை அது இழுத்துக் கொண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் கூடி வந்து அந்த பெண்ணை மீட்டனர். தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து அந்த மாட்டை பிடித்துக் கொண்டு சென்றனர். 


பின்னர் அந்த மாட்டை பராமரிப்பு மையத்திற்குக் கொண்டு சென்று அடைத்தனர். அங்கு அந்த மாநாடு தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாட்டை யாரும் இதுவரை உரிமை கோரவில்லையாம். உரிமையாளர் யார் என்பதைக் கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை தெருக்களில் திரிந்த 1117 கால்நடைகளை பிடித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்