சென்னை: அப்பாடா ஒரு வழியா பொங்கல் முடிஞ்சாச்சு.. அட இருங்க பாஸ்.. இன்னும் பொங்கல் முடியலை.. ஏன்னா உங்களுக்கு சூப்பரான ஒரு பொங்கல் டிப்ஸ் தரப் போறோமே இப்போ.. அதையும் செஞ்சு பார்த்துட்டு அப்புறமா பொங்கலை சிறப்பா முடிச்சுக்கலாம்.. என்ன ஓகே.வா.. வாங்க மறுபடியும் கிச்சனுக்குள்ள போகலாம்.
தேவையான பொருட்கள் :
1. வரகு அரிசி - 2 கப் (நன்கு கழுவிக் கொள்ளவும்)
2. பாசிப் பருப்பு - 1 கப்
3. இஞ்சி, பூண்டு - பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்
4. சீரகம், மிளகு - 1 ஸ்பூன்
5. பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
6. வெல்லம் - 1 கப்பு துருவியது
7. ஏலக்காய் - 3 பொடித்தது
8. நெய் - 2 ஸ்பூன்
9. முந்திரி - 20 (சிறிதாக)
10. கறிவேப்பிலை - 6
செய்முறை :
குக்கரில் வரகு அரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து 6 கப் தண்ணீர் ஊற்றி, 4 விசில் விட்டு இறக்க வேண்டும். (1 க்கு 2 பங்கு என்ற வீதத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டும்)
பொங்கலை பாதியாக பிரித்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை பொங்கல் - வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து, ஏலக்காயை தட்டி சேர்க்கவும். பாகு பதம் வந்ததும் வடிகட்டி பாதி எடுத்து வைத்த பொங்கலில் ஊற்றவும். ஏலக்காய் பொடியும் சேர்க்கலாம். நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்தால் சர்க்கரை பொங்கல் ரெடி.
கார பொங்கல் - சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சிறிது நெய்யில் வறுத்து போட்டு மீதி பொங்கலுடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும். சட்னி, சாம்பாருடன் சாப்பிட அருமை.
பலன்கள் :
வரகு அரிசி:
1. வரகு அரிசியில் கோதுமையை விட நார்ச்சத்து அதிகம்.
2. மாவுச்சத்து இதில் குறைவு. ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
3. உடல் எடையை குறைக்க ஏற்றது.
4. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. நிறைவான உணவாக இருக்கும்.
6. குடல் புண் குணமாகும்.
7. மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
8. இரும்பு சத்து, வைட்டமின்கள், பாஸ்பரஸ், கால்சியம், தாது உப்புக்கள் நிறைந்தது.
9. இதயம் பலப்பட்டு இதய ஆரோக்கியம் மேம்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
10 வருடங்களுக்கு பிறகு.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்
அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!
முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு
காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!
வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!
இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!
{{comments.comment}}