டெல்லி: காங்கிரஸ் குழு கூட்டம் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத் தொடர் கடந்த நவம்பர் 25 ஆம் தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணி சேர்ந்த எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் துப்பாக்கி சூடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால் இந்த கருத்துக்கள் எதையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. அப்போது தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமலியில் ஈடுபட்டதால் இரண்டு முறையும் ராஜ்யசபா லோக்சபா என இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் 2:30 மணி அளவில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உட்பட பல்வேறு செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் மக்களவையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், தற்போதைய அரசியல், பொருளாதார பிரச்சினைகள், குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
அதே சமயத்தில் அடுத்த ஆண்டு வரும் டெல்லி சட்டசபை தேர்தல் குறித்தும் விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்பியாக பிரியங்கா காந்தி பதவியேற்ற பிறகு காங்கிரஸ் சார்பில் நடைபெறும் முதல் காரியக் கமிட்டி கூட்டம் இதுவே என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}