மோடி அரசின் தவறான நிர்வாகமே ரயில் விபத்துகள் நிகழ காரணம்: மல்லிகார்ஜுன கார்கே

Jun 17, 2024,06:00 PM IST

டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம். ரயில்வே அமைச்சகத்தை மோடி அரசு சுய விளம்பரத்துக்கான துறையாக மாற்றிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டியுள்ளார்.


மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் இந்த விபத்து நேர்ந்தது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மத்திய அரசைக் கண்டித்துள்ளது.


இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே அமைச்சகத்தின் தவறான நிர்வாகத்தில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலம் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்.  ரயில்வே அமைச்சகத்தை பாஜக அரசு சுய விளம்பரத்துக்கான துறையாக மாற்றிவிட்டது. இதனை ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அடிக்கோடிட்டுக் காட்டுவது எங்களது கடமையாகும்.




ரயில்வே அமைச்சகத்தை பாஜக அரசு சுய விளம்பரத்துக்கான துறையாக மாற்றிவிட்டது.ரயில்வே நிர்வாகம் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதற்கு இன்று நடந்த விபத்தே சாட்சி. தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும். மேலும், ரயில் விபத்திற்கு பாஜக பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்