பாஜகவில் சேரும் நிலைக்கு என்னைத் தள்ளி விட்டுள்ளது காங்கிரஸ்.. விஜயதரணி பேச்சு!

Feb 24, 2024,05:50 PM IST
டெல்லி: எதிர்பார்த்தது போல, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து விட்டார் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி. இதனால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

காங்கிரஸ் சார்பில் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருபவர் எம்எல்ஏ விஜய தரணி. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு எம்எல்ஏவாக இருப்பவர். தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற முதன்மை கொறடாவாக இருந்தும் வந்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டவர் எச்.வசந்தகுமார். இவர் கொரோனா தொற்றால் காலமானார். அதன் பிறகு கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தற்போது எம்எல்ஏவாக உள்ள விஜயதரணி வாய்ப்பு கேட்டார். ஆனால் காங்கிரஸ் தொகுதியை ஒதுக்க மறுத்துள்ளது. இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் மீது விஜயதாரணி  அதிருப்தியில் இருந்து வந்தார்.





இதனால் அதிருப்தியுடன் இருந்து வந்த விஜயதரணி, கட்சி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். இந்தநிலையில், சமீபகாலமாக எம் எல் ஏ விஜயதரணி காங்கிரஸ் கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்காக கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் முகாமிட்டு வந்துள்ளார்.

ஆனால் இதை சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற செல்வப்பெருந்தகை மறுத்தார். விஜயதரணி பாஜக வலையில் சிக்க மாட்டார். வழக்கு ஒன்றுக்காகத்தான் அவர் டெல்லி போயுள்ளார் என்று கூறி வந்தார். இந்த நிலையில்தான், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் இன்று பாஜகவில் இணைந்தார் விஜயதரணி.

தற்போது பாஜகவில் இணைந்துள்ள எம்எல்ஏ விஜயதரணிக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.  இரண்டு நாள் பயணமாக வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் விஜயதாரணியும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தான் சிறு வயது முதலே காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்ததாகவும், தன்னை பாஜகவில் சேரும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளி விட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் விஜயதரணி. 

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்