காங்கிரஸ் தொகுதி சொல்லியாச்சு.. அடுத்து என்ன விருப்ப மனுதான்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாமாம்!

Mar 18, 2024,04:36 PM IST

சென்னை: திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஆக மொத்தம் பத்து தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 என தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கட்சிகளின் செயல்பாடுகள் வேகம் பிடித்துள்ளன. திமுக கூட்டணி இன்று தனது தொகுதிப் பங்கீட்டை முழுமையாக முடித்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்கான 9 தொகுதிகளையும் இன்று அறிவித்தது திமுக. இக்கூட்டணியில்  திமுகவுக்கு 21 தொகுதியும், காங்கிரசுக்கு 10 தொகுதியும், முஸ்லீம் லீக், மதிமுக மற்றும் கொமதேக வுக்கு தலா ஒரு  தொகுதியும், சிபிஐ,  சிபிஎம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா இரண்டு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.


திமுக கூட்டணியில், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், திருநெல்வேலி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளும் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கபட்டுள்ளன. 




இந்த நிலையில்  காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் சென்னை சத்தியமூர்த்தி பவனில்  ரூபாய் 500  கட்டணமாக செலுத்தி விருப்ப மனுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப மனு படிவங்களை பூர்த்தி செய்யப்பட்ட பின் புதன்கிழமை மதியம் ஒரு மணிக்குள் செலுத்த வேண்டும். நாடாளுமன்ற பொதுத் தொகுதிக்கு ரூபாய் 30,000, தனித் தொகுதி மற்றும் மகளிருக்கான தனித் தொகுதிக்கு ரூபாய் 15,000 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 


அதேபோல் விளவங்கோடு  சட்டசபைத் தொகுதிக்கு ரூபாய் 10,000 , மகளிருக்கு ரூபாய் 5000 நன்கொடையாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் வங்கியில் காசோலையாக மட்டுமே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்