டெல்லி: 4 மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள தோல்வி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் மட்டும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் ஆட்சியை பாஜகவிடம் பறி கொடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்திலும் பாஜகவை வீழ்த்த முடியாமல் தோற்றுள்ளது.
இந்த முடிவு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தெலங்கானா மக்கள் அளித்த தீர்ப்புக்காக அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில மக்கள் காங்கிரஸுக்கு அளித்த வாக்குகளுக்காக அவர்களுக்கும் எனது நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன். இந்த மூன்று மாநிலங்களிலும் எங்களது செயல்பாடு சந்தேகம் இல்லாமல் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. ஆனால் உறுதியுடன் கூறுகிறேன், மீண்டும் எழுச்சியுடன் புத்துணர்ச்சியுடன் இந்த மாநில மக்களுக்காக மீண்டும் உழைப்போம். மீண்டு வருவோம்.
நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் போட்டியிட்டது. எங்களது வேட்பாளர்களின் வெற்றிக்காக லட்சோப லட்சம் தொண்டர்களும் உறுதியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பணியாற்றினர். அவர்களைப் பாராட்டுகிறேன்.
இந்த தற்காலிக பின்னடைவிலிருந்து மீண்டு வருவோம். இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து, எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்கு முழுமையாக எங்களைத் தயார்படுத்திக் கொள்வோம் என்று கூறியுள்ளார் கார்கே.
LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!
சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!
வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!
மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!
{{comments.comment}}