லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று ராகுல் காந்தி பெயரை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
முன்னதாக இத்தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பிரியங்கா காந்தியை தேர்தலில் காங்கிரஸ் நிறுத்தவில்லை. மாறாக ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்பாளராக்கப்பட்டுள்ளார். அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ரேபரேலி தொகுதியில் இதற்கு முன்பு இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இது இந்திரா குடும்பத்துத் தொகுதியாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடவில்லை. அவர் ராஜ்யசபா உறுப்பினராக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த பாரம்பரியம் மிக்க தொகுதியில் ராகுல் காந்தி வேட்பாளராகியுள்ளார்.
ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். அவர் ரேபரேலியில் போட்டியிடுவதால் காங்கிரஸார் உற்சாகமடைந்துள்ளனர். ராகுல் காந்தி ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பியாக உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் வயநாடு, அமேதியில் போட்டியிட்டார். அதில் அமேதியில் தோல்வி அடைந்தார். ஆனால் வயநாடு தொகுதியில் மிகப் பெரிய வெற்றியடைந்தார். இந்த முறையும் அவர் வயநாட்டில் போட்டியிட்டுள்ளார். அங்கு தேர்தல் முடிந்து விட்டது. இந்த நிலையில் அமேதிக்குப் பதில் ரேபரேலியில் அவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற ஸ்மிருதி இராணியே இந்த முறையும் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். கடந்த முறை ராகுல் காந்தியை தோற்கடித்ததால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் கிடைத்தது. ஆனால் தற்போது அவருக்கு வலுவான போட்டியாளர் இல்லாமல் போய் விட்டது. பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் நிறுத்தப்படவில்லை.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}