புதுப்பிக்கப்பட்ட அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள்.. இன்று திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Feb 26, 2024,05:12 PM IST

சென்னை:  புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் நினைவிடம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடங்களை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மாலை 7 மணிக்கு திறந்து வைக்க உள்ளார்.


கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 110 விதியின் கீழ் சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் புதிய கலைஞர் நினைவிடம் மற்றும்  அறிஞர் அண்ணாவின் நினைவிடம் புனரமைக்க  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நினைவிடம் கிட்டத்தட்ட 35 கோடி செலவில் 8.57 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக அதிநவீன  தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.




இந்த நிலையில் நவீன தமிழகத்தின் சிற்பி என அழைக்கப்படும் மறைந்த முதல்வர் கருணாநிதியின் புதிய நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் நினைவிடங்களை இன்று மாலை 7 மணிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதனைக் காண நினைவிடத்திற்கு வெளியே பொதுமக்கள் நின்று பார்ப்பதற்காக இருபுறமும் எல் இ டி திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக பொதுப்பணித்துறை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கருணாநிதி நினைவிடத்தின் சிறப்பம்சங்கள்:


நினைவிடப் பிரதான நுழைவு வாயிலில், நுழையும் போதே ஏற்கனவே உள்ள தூண்கள் புதுப்பிக்கப்பட்டு அதில் கலைஞர் மற்றும் அண்ணாவின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டு புறமும் திருவள்ளுவர் மற்றும் கம்பர் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளே வரவேற்பது போல் அமைக்கப்பட்டுள்ளன. 




திராவிட ஆட்சியில் செய்த அதிநவீன திட்டங்கள் மற்றும் பல்வேறு தலைவர்களின் சாதனைகளை நினைவு கூறும் வகையில் நினைவிடங்களின் உள்ளேயே அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளன. உரிமைப் போராளி மற்றும் கலைஞரின் எழிலோவியம் என்ற பெயரில் அறைகள் கட்டப்பட்டுள்ளன. கலைஞரின் எழிலோவியம் என்ற அறையில் கருணாநிதியின் வாழ்க்கையில் நிகழ்ந்த வரலாற்று சாதனைகளை புகைப்படங்கள்  விளக்கும் விதத்தில்  இடம் பெற்றுள்ளன. இது மட்டுமல்லாமல் கோபாலபுரத்தில் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தில் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.


அதன் அருகில் நின்று பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டால் சில நிமிடங்களில் புகைப்படம்  கிடைப்பது போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கலை அறிஞர் கலைஞர் என்ற அறையில் இருபுறமும் இருக்கைகள் அமைக்கப்பட்டு அதில் கலைஞரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான முக்கிய வரலாற்று சிறப்புகள் குறித்த 20 நிமிடங்களில் ஒரு வரலாற்று ஆவண படமாக காட்சியகப்படுத்தப்பட்டுள்ளன. 


கலைஞரின் நினைவிடத்தில் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பவர். இங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன. கலைஞரின் புத்தகங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் காட்சியகப்படுத்தப்பட்டுள்ளன.இதனை பொதுமக்கள், பார்வையாளர்கள் தொட்டுப் பார்க்கும்போது அந்த புத்தகத்தின் குறிப்புகள் அவரின் சிறப்புகள் மற்றும்  சாதனைகளை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்