அமைச்சர் பொன்முடி விவகாரத்தில்.. ஜனநாயகம் வென்று விட்டதாக.. முதல்வர் மு க ஸ்டாலின் ட்வீட் !

Mar 22, 2024,05:43 PM IST
 சென்னை: அமைச்சர் பொன்முடி விவகாரத்தில, இன்று மீண்டும் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ள நிலையில்,அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான மாண்புமிகு உச்சநீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு க ஸ்டாலின் ட்விட் போட்டுள்ளார்.

அமைச்சர் பொன்முடி திமுகவில் உயர் கல்வி அமைச்சராக இருந்தவர். இவர் வருமானத்திற்கு அதிகமாக செத்து சேர்த்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்து மூன்று வருட சிறந்த தண்டனை வழங்கியது. இதனால் இவர் அமைச்சர் பதவியில் நீக்கப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்  அமைச்சர் பொன்முடி. இதன் காரணமாக இவருடைய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து அமைச்சர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் மு க ஸ்டாலின்,ஆளுநர் ரவிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.ஆனால் ஆளுநர், அமைச்சர் பொன்முடி குற்றவாளி தான். அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கூறியிருந்தார்.


இதனை அடுத்து அமைச்சர் பொன்முடிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்திற்கு மனு அளித்திருந்தார் முதல்வர். இந்த மனுவை விசாரித்த டி.ஒய் சந்திரசூட், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க நாளை வரை ஆளுநருக்கு அவகாசம் அளிப்பதாக  நேற்று உத்தரவிட்டார். மேலும் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தும் எதன் அடிப்படையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை   என சரமாரியாக  கேள்வி எழுப்பினார்.




இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் கொடுத்த கெடு முடிந்ததை அடுத்து இன்று பொன்முடிக்கு மீண்டும் உயர் கல்வி அமைச்சராக பதவி வழங்கி, ஆளுநர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இது பற்றி முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,

அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான மாண்புமிகு உச்சநீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடந்த தசாப்தத்தில், #இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் வறண்டு போவதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முன் கூர்முனைகளை வைக்கும் தவறான சாகசங்களையும், பழமையான மரபுகளை வழங்குவதையும் கண்டனர். தேர்தல் 2024 ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது.  நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம் என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்