முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களால்.. வேளாண் துறையில் சாதனை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

May 23, 2024,04:19 PM IST

சென்னை: முதல்வர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த சீர்மிகு திட்டங்களால் உணவு உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து அரசுத் தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கை:




தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு துறைகளில் பல நலத்திட்ட திட்டங்களை வகுத்தார். இந்தத் திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக வேளாண்மை துறைக்காக  தமிழ்நாட்டில் முதல்முறையாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.


இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் சீர்மிகு திட்டங்களால் இந்தியாவிலேயே வேளாண்மைத் துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்த வேளாண்மை திட்டத்தில் இதுவரை, விவசாயிகள் பயன்பெறும் வகையில் 270 கோடி செலவில் 2163 டிராக்டர்கள், 9303 பவர் டில்லர்கள், 288 அறுவடை இயந்திரங்கள், 2868 விவசாய பிற கருவிகள் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. 24.50 லட்சம் விவசாயிகளுக்கு 4,366 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 


கடந்த மூன்று ஆண்டு காலங்களில் வறட்சி பேரிடரால் 12.88 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர் பயிர் சேதங்களுக்கு ரூபாய் 582 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 8 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.


கரும்பு உற்பத்திக்கு ஊக்கத்தொகை, சிறப்பு உற்பத்தி தொகை, என ரூபாய் 651 கோடி  ரூபாய் 4.4 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உழவர் சந்தைகள் 27.5 கோடி செலவில் 100 உழவர் சந்தைகள் புரனமைக்கப்பட்டுள்ளது.  10 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஏற்கனவே உள்ள 25 உழவர் சந்தைகளில் காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.


71 விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை இயந்திரம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகை கடனாக 600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த திட்டங்களால் வேளாண் உற்பத்தி பெருகி உழவர்கள் பயனடைகின்றனர். தமிழ்நாடும் உணவு உற்பத்தியில் முன்னேறி உள்ளது. இதனால் அண்டை மாநிலங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக சாதனை படைத்ததாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்