சென்னை: முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய தென் திசையின் தீர்ப்பு நூலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். இந் நூலை திமுக பொருளாளர் டி ஆர் பாலு பெற்றுக்கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தற்போது புத்தக வடிவில் கொண்டு வந்து ஆவணப்படுத்தியுள்ளது திமுக. இந்த நூலை முதல்வர் மு.க.ஸ்டாலினே எழுதியுள்ளார்.
முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர்கள், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு, முதன்மை செயலாளர் கே என் நேரு, தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய 40க்கு 40 தென்திசையின் தீர்ப்பு என்ற நூலை திமுக பொதுச்செயலாளர் துறைமுகன் வெளியிட்டார். இதனை டி ஆர் பாலு பெற்றுக் கொண்டார்.
இந்த நூலில் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 என்ற அடிப்படையில் அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 40 தொகுதிகளிலும் தேர்தல் வியூகம் என்ன.. அது எப்படி சாத்தியமானது.. என்ற அடிப்படையில் 40க்கு 40 தென்திசை தீர்ப்பு நூலை முதல்வர் மு க ஸ்டாலின் எழுதியிருந்தார்.
முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து முதல்வர் மு க ஸ்டாலின் கூறியதாவது, சுணக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த முறையும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் இருக்கும். மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை அளித்திருக்கிறோம் அது வாக்குகளாக மாற்ற நம்முடைய களப் பணி என்பது மிகவும் அவசியம். திமுக வை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் லில் வெற்றி பெறுவது தான் நம்முடைய இலக்கு. அமெரிக்காவில் இருந்தாலும் கட்சி மற்றும் ஆட்சியை கவனித்துக் கொண்டே தான் இருப்பேன் என பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}