கடலூரில்.. இன்றும், நாளையும்..கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்.. முதல்வர் மு க ஸ்டாலின்..!

Feb 21, 2025,11:47 AM IST

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடலூரில் இன்றும் நாளையும் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்.


திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் முழுமையாக சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்ய மாவட்டம் தோறும் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதுவரை கோவை, விருதுநகர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக திமுக சார்பில் திட்டமிட்டுப்பட்டுள்ளது. 




ஏனெனில் ஏற்கனவே விழுப்புரத்தில் நடைமுறைப்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 4,50,134 பேரும், விடியல்  திட்டத்தில் 18 கோடியே 60 லட்சத்து 63ஆயிரத்து,302 பேரும், புதுமைப்பெண் திட்டத்தில் 13 ஆயிரத்து 18 பேரும், தமிழ் புதல்வன் திட்டத்தில் 13,514 பேரும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 63,662 தொடக்கப்பள்ளி மாணவர்களும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 1500 குடும்பங்களும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 20 லட்சத்து 86 ஆயிரத்து 173 பேரும் பயனடைந்து உள்ளனர். மேலும், இத்திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேருகிறதா என்பது தொடர்பான ஆய்வினை மேற்கொள்ள இன்றும் நாளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் விழுப்புரம் செல்கிறார்.


இதற்காக, சென்னையில் இருந்து இன்று காலை சாலை மார்க்கமாக கடலூர் மஞ்சக்குப்பம் செல்லும் அவர், அரசு சார்பில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 30,000 க்கும் அதிகமான ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் நெய்வேலியில் ரோடு ஷோவை முடித்துக் கொண்டு மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் பங்கேற்கிறார். இதில் மாற்று கட்சியினர் 5000 பேர் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. 


பின்னர் இரவு அரசினர் மாளிகையில் தங்கிவிட்டு மீண்டும் நாளை வேட்பூரில் நடைபெறும் பெற்றோரை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். அப்போது முடிவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் இருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்