கீழடிக்கு வாருங்கள்.. மனிதகுலத்தின் தொல் நாகரீகத்தைப் பாருங்கள்.. ஸ்டாலின் பெருமிதம்

Mar 06, 2023,09:32 AM IST
மதுரை: மனித குலத்தின் தொல்நாகரீக இனமாம் நம் தமிழினித்தின் பழம் பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்கியகத்தை அனைவரும் வந்து பார்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



மதுரை அருகே உள்ளது கீழடி கிராமம். சிவகங்கை மாவட்டத்தின் கீழ் வரும்  கீழடியில் நடந்த தொல் பொருள் ஆய்வின்போது மிகப் பெரிய வரலாறு அங்கு புதையுண்டு கிடப்பது தெரிய வந்தது. மனிதகுலத்தின் தொல் நாகரீகத்தை அடையாளம் போட்டுக் காட்டியது கீழடி அகழாய்வு.

இதுவரை நமக்குக் கிடைத்திராத பல வரலாற்று சான்றுகள் கீழடியில் கிடைத்தன. தமிழ் பிராமி எழுத்துக்கள், அழகிய வேலைப்பாடுடன் கூடிய செங்கல் கட்டுமானங்கள், தாழிகள், காசுகள், அணிகலன்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அங்கு கிடைத்துள்ளன.



மிக மிக தொன்மையான தமிழ் நாகரீகம் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களை எல்லாம் பத்திரப்படுத்தி வைக்க கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர் வந்த திமுக ஆட்சியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு தற்போது கட்டி முடிக்கப்பட்டு திறந்தும் வைக்கப்பட்டுள்ளது.

ரூ. 25 கோடி  செலவில் கட்டுமானப் பணிகள் முடிந்து அருங்காட்சியகம் அருமையாக உருவெடுத்துள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்துப் பார்வையிட்டார். செட்டி நாட்டு வீடு போன்ற வடிவமைப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 6 காட்சிக் கூடங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. பின்னர் கீழடி அகழாய்வுப் பொருட்களுக்கு அருகில் நின்று செல்பியும் எடுத்து மகிழ்ந்தார்.



தனது கீழடி பயணம் தொடர்பாக முதல்வர் தனது முகநூலில் எழுதியிருப்பதாவது:

மனிதகுலத்தின் தொல்நாகரிக இனமாம் நம் தமிழினத்தின் பழம்பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கும் பெரும் பேற்றை நான் பெற்றேன்.

ஆற்றங்கரை நாகரிகத்தின் ஆதிமுகமான வைகைக் கரையில் அமைந்திருந்த நகரத்தின் வயது 2,600 ஆண்டுகள். அகழாய்வில் அகலமாய்த் தோண்டத் தோண்ட எண்ணிலடங்காப் புதையல்களை எடுத்து வருகிறோம். கல் மணிகள் முதல் தங்க அணிகலன்கள் வரை கிடைத்திருக்கிறது.

பழந்தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள் துணையோடு நாம் பேசிவந்த அனைத்துக்கும் மேலும் அசைக்கமுடியாச் சான்றுகள் கிடைத்த இடம் கீழடி. இவை அனைத்தையும் அருங்காட்சியகமாக ஆக்கி வைத்திருக்கிறது நமது தமிழ்நாடு அரசு.

ஈராயிரம் ஆண்டுக்கும் முந்தைய தமிழர் வரலாற்றின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் வந்து பார்க்கும் காட்சியகமாக அமைந்துள்ளது. காலத்தே பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் அழைத்துச் செல்லப் போகிறது. வரலாறு படிப்போம். வரலாறு படைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்