மக்களோடு இருக்கிறோம், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்.. சாதனை தொடர்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jul 13, 2024,05:11 PM IST

சென்னை: நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது கழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக சாதனை வெற்றியாக விக்கிரவாண்டி வெற்றி  அமைந்துள்ளது. நாங்கள் எங்கள் சாதனை பயணத்தையும் வெற்றி பயணத்தையும் தொடர்கிறோம். மக்களோடு இருக்கிறோம், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது திமுக. அக்கட்சி அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு 1 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:




விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் 40க்கு 40 என்ற நூறு விழுக்காடு வெற்றியை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பெற்றது. சாதாரண வெற்றி அல்ல. பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியை பெற்றோம். அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. பாஜக கூட்டணி பாதாளத்தில் விழுந்தது.


இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொண்டோம். விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய புகழேந்தி அவர்கள் உடல்நிலை காரணமாக மரணமெய்தியதை தொடர்ந்து இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக ஆற்றல் மிகு உடன்பிறப்பு அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்தோம். நாடாளுமன்றத் தேர்தலில் சந்தித்த படுதோல்வியிலிருந்து எழ முடியாமல் இருந்த அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியை தான் சந்திக்க போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியிலிருந்து பின்வாங்கியதுய பாஜக தனது அணியில் இருக்கும் பாமகவை நிறுத்தியது.


இடைத்தேர்தலில் நிற்பது இல்லை என்ற வைராக்கியமாக இருந்த பாமக விக்கிரவாண்டி இடைத்தளத்தில் போட்டியிட முன்வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை. தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும் பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்பரையை பாஜக அணி செய்தது. பொய் வேஷக்காரர்களின் பகல்வேச பரப்புரையை மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்.


தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் திராவிட முன்னேற்ற கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலில் மூலமாக எடை போட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நேரம் காலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும் தினந்தோறும் உருவாக்கி கொடுத்த திட்டங்களுக்கும் மக்கள் தெரிவித்த நண்றியின் அடையாளமாகவே இந்த வெற்றியை நான் பார்க்கிறேன். திராவிட முன்னேற்றக் கழக ஆற்றல் மிகு வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெற வைக்க பொறுப்பேற்றுக்கொண்ட கழக துணை பொதுச்செயலாளர் அமைச்சர் கா பொன்முடி கழகக் கொள்கை பரப்பு செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ் ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் அமைச்சர் பெருமக்கள் மாவட்ட கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் களம் கண்டார்கள்.


நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் என பலரும் களப்பணி ஆற்றினார்கள். பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் இளைஞரணி செயலாளர் தம்பி உதயநிதி உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் தேர்தல் பரப்புரை செய்தார்கள். நமது இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார்கள். இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் உடன்பிறப்புகளுக்கும் தோழமைக் கட்சி தோழர்களும் உதயசூரியனின் வெற்றிக்கு இரவு பகல் பாராது கண் துஞ்சாது உழைத்த அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.


விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் தம்பி பொன் கௌதம சிகாமணி உள்ளிட்ட ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இதே நேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியை தழுவி இருக்கிறது. 


நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெறாத கட்சிதான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக.  அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத் தேர்தலிலும் கிடைத்துள்ளது. தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும், கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும்.


தமிழ்நாட்டை பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது. திமுக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும் எழுச்சியையும் அதே சமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது கழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது.


நாங்கள் எங்கள் சாதனை பயணத்தையும் வெற்றி பயணத்தையும் தொடர்கிறோம். மக்களோடு இருக்கிறோம், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்