கவிஞர் நந்தலாலா மறைவு வருத்தம் தருகிறது.. முதல்வர் மு க ஸ்டாலின்!

Mar 04, 2025,05:52 PM IST

சென்னை: பட்டிமன்ற பேச்சாளரும், கவிஞருமான நந்தலாலா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது இறப்பு செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன் என முதல்வர் மு க ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


பட்டிமன்ற பேச்சாளரும், கவிஞருமான நந்தலாலா(70) உடல் நலக்குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இவரது உடல் பூர்வீகமான திருச்சி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் கவிஞர் நந்தலாலாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின். இது குறித்து அவர்  கூறியதாவது, 



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான, கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.


 தமிழ்நாட்டின் புத்தகத் திருவிழாக்கள் முற்போக்கு மேடைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பட்டிமன்றங்கள், என கலைஞர் நந்தலாலா அவர்களின் குரல் ஒலிக்காத மேடையே இல்லை என்னும் அளவுக்கு அனைத்து உணர்ச்சிகளையும் அரிய தகவல்களையும் தமது பேச்சில் வெளிப்படுத்தும் திறம் பெற்றவர் அவர்.


 காவிரி கரையின் மைந்தனான கவிஞர் நந்தலாலா அவர்கள் தனது ஊரான திருச்சியின் மீது கொண்ட தீரா காதலுக்கு திருச்சிராப்பள்ளி ஊரும் வரலாறு நூலே சான்றாகும்.


 அவரது ஆற்றல் தமிழ் சமூகத்திற்கு மேலும் பயனளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் அவரை நியமித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. 


தந்தை பெரியார் மீது பெரும் பற்றும், பேரறிஞர் அண்ணா மீது பெருமதிப்பும் தலைவர் கலைஞர் மீது மிகுந்த அன்பும் கொண்டிருந்தவர் கலைஞர் நந்தலாலா அவர்கள். அறிவும் துணிச்சலும் செயலுமாக   வாழ்ந்தவர் கலைஞர். உரிமை மீட்பு போரில் அவரே நமக்கு என்றும் போர்வாள் என்றும் உண்மை இதழில் அவர் எழுதிய சொற்களை மறக்க முடியாது. என் மீதும் மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தார். எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பரந்த மனதோடும் அன்போடும் வாழ்த்தி பேசியதையும் இவ்வேளையில் நினைவு கூறுகிறேன். 


மேலும் பல்லாண்டுகள் தமிழ் சமூகத்திற்கு அருந்தொண்டாற்றவிருந்த அவர் மறைந்து விட்டார் என்பது வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் தோழர்களுக்கும், தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கலையும் ஆறுதல்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் தாமரையுடன் சங்கமிக்கத் தயாராகிறதா இரட்டை இலை.. பரபரக்கும் அரசியல் களம்!

news

கவிஞர் நந்தலாலா மறைவு வருத்தம் தருகிறது.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக கூறியதா..? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

news

ராஷ்மிகாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகனிகா கொந்தளிப்பு!

news

தொகுதி மறு சீரமைப்புக்கு எதிர்ப்பு.. அனைத்து கட்சிக் கூட்டம்.. தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு

news

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

news

வட நாட்டில் ஏன் தமிழ் பிரச்சார சபா நிறுவவில்லை..? முதல்வர் மு க ஸ்டாலின் கேள்வி!

news

திருச்சியின் பண்பாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை கவிஞர் நந்தலாலா.. தமுஎகச இரங்கல்

news

மக்களே உஷாராக இருங்க.. இன்று முதல் 8ஆம் தேதி வரை.. தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவுமாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்