ஹாங்காங்: சீனாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் கூகுள் நிறுவனம் இறங்கியுள்ளது. அதிக சம்பளம் வாங்குவோர், உயர்ந்த பொறுப்பில் உள்ளோர் முதல் கட்டமாக நீக்கப்பட்டு வருகின்றனர்.
உலக அளவில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. டிவிட்டர் தொடங்கி மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட் என பலரும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் கூகுள் நிறுவனம் சீனாவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதிக சம்பளம் வாங்குவோர் மற்றும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் முதல் கட்டமாக வேலையை விட்டு அனுப்பப்படுகின்றனர். இதன் மூலம் செலவுகளைக் குறைத்து திறனை அதிகரிக்க முடியும் என்று கூகுள் விளக்கம் அளித்துள்ளது.
மார்ச் 10ம் தேதிக்குள் தாங்களாகவே விலகினால் சில சலுகைகளையும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மார்ச் 10ம் தேதிக்கு பிறகு நீக்கப்படும் ஊழியர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காதாம்.
வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 3 மாத கால பஃபர் பீரியடையும் கூகுள் அறிவித்துள்ளது. அதாவது வேலை நீக்கம் செய்யப்பட்ட பிறகு 3 மாதங்களுக்கு சம்பளம் மட்டும் தரப்படுமாம்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சமீபத்தில்தான் 12,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது. இவர்களது வேலை நீக்கத்தில் 100 ரோபோட்டுகளும் கூட அடக்கம். கூகுள் தலைமை அலுவலகத்தில் கான்டீன்களை சுத்தம் செய்யும் பணியில் இந்த ரோபோட்டுகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அதற்கும் பராமரிப்பு செலவாகிறது என்று கூறி அவற்றையும் நீக்கி விட்டனர். இந்தியாவிலும் 400க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}