அரிட்டாபட்டி விவகாரம்.. எடப்பாடி பழனிச்சாமி நடிக்கிறார்.. முதல்வர் மு.க. ஸ்டாலின்

Dec 09, 2024,05:45 PM IST

சென்னை: சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


மதுரை அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட  தனித்தீர்மானத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எட்பாடி பழனிச்சாமி பேசுகையில், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினாலும், இதுவரை தமிழக அரசு கண்டிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டும். சுரங்கம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.




அதற்கு பதில் அளிக்கும் வகையில், பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவலை அவையில் பதிவு செய்யக் கூடாது. எங்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் அந்த சட்டம் நிறைவேறவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு மத்தி அரசு ஏலம் விட்டாலும் மாநில அரசு ஒருபோதும் அனுமதி கொடுக்காது. மக்கள் பிரச்சினையில், திமுக அரசு எந்த காலத்திலும் அலட்சியமாக இருந்ததில்லை. நான் முதலமைச்சராக இருக்கும் வரை, தமிழ்நாட்டுக்குள் டங்க்ஸ்டன் சுரங்கம் அமையாது. அப்படி அமைந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று பேசினார்.


இதனைத் தொடர்ந்து மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம் பரபரப்பான விவாதங்களுக்குப் பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,


சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.


சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்… தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது! என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்