17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. "விஷமிகளை குண்டாஸில் போடுங்க".. பெற்றோர்கள் கோபம்!

Feb 08, 2024,05:46 PM IST

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் உள்ள 17 தனியார் பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற மிரட்டல் விடும் விஷமிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலர் குமுறல் வெளியிட்டுள்ளனர். இந்த விஷமிகளால் இன்று காலை சென்னையில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டு விட்டது.


சென்னை அண்ணா நகர், பாரி முனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலை புரம், திருமழிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல தனியார் பள்ளி பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் ஒரே முகவரியிலிருந்து மர்ம நபர்களால் காலையில்  வெடிகுண்டு மிரட்டல் வந்தது.




இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் அழைத்துச் செல்லுமாறு வாட்ஸப், மெசேஜ் மற்றும் இமெயில் மூலம் செய்திகள் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.


வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட  தனியார் பள்ளிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனைகளை நடத்தினர்.




வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. பலரும் பதறியடித்து பள்ளிகளுக்கு ஓடி வந்தனர்.


இதுபோன்ற மிரட்டல் விடுக்கும் நபர்களை கடுமையான சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோபமாக தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்