சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட்.. 3 நாள் வெளியே வராதீங்க.. போலீஸ் அட்வைஸ்!

Dec 03, 2023,06:00 PM IST

சென்னை : சென்னைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள மிச்சாங் (மிக்ஜாம்) புயல், அதிதீவிர புயலாக ஆந்திரா அருகில் டிசம்பர் 05ம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் மூன்று நாட்களுக்கு யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை போலீசார் பொது மக்களை அறிவுறுத்தி உள்ளனர். மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இங்கு 200 மில்லி மீட்டர் அளவுக்கு மிக அதிக கன மழை பெய்யும் என்று அர்த்தம்.


சென்னை போலீசார் வெளியிட்டுள்ள தகவலின் படி, இன்று பிற்பகல் முதல் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால், புயல் கரையை கடந்து விட்டது. இனி ஆபத்து இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் வரை அடுத்த 3 நாட்களுக்கு பொது மக்கள் யாரும் அவசியம் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் மழைநீரில் வாகனங்களை இயக்க வேண்டாம். அதிக மழை பெய்யும் சமயங்களில் எலக்ட்ரானிக் சாதனங்கள் எதையும் பயன்படுத்த வேண்டாம். 




மரங்களுக்கு கீழே வாகனங்களை நிறுத்த வேண்டாம். காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கட்டுமான பணிகளில் ஈடுபடுவோர் கிரேன் போன்ற இயந்திரங்களை பத்திரமாக நிறுத்தி வைக்க வேண்டும்.  வெல்டிங் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டாம். தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



சென்னையில் கனமழை காரணமாக பேரிடர் மீட்புக் குழு ஏற்கனவே சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து மேலும் 100 பேர் கொண்ட குழு சென்னை வந்துள்ளது. படகுகள் போன்ற மீட்பு, பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.


Michaung புயல் எதிரொலி... சென்னை, ஆந்திரா வரும் 54 ரயில்கள் ரத்து

சமீபத்திய செய்திகள்

news

மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்: தவெக தலைவர் விஜய்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

தங்கம் வாங்க இதுவே தங்கமான நேரம்... தொடர் குறைவில் தங்கம் விலை!

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 08, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

வெஜ் பிரியாணிக்கு பதிலாக.. நான்வெஜ் கொடுத்த ஸ்விக்கி.. ஹோட்டல் உரிமையாளர் கைது..!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

அதிகம் பார்க்கும் செய்திகள்